dhanush-anirudh-clash
அனிருத் தி ராக் ஸ்டார் என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படுபவர் இவரை முதல் முதலாக அறிமுகம் செய்தது தனுஷ் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 திரைப்படத்தில் முதல் முதலாக இசையமைப்பாளராக கொல வெறி பாடலை இசையமைத்து உலக புகழ் பெற்றார்.
ரஜினி குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர் என்பதனாலும் அவரின் திற‌மையாலும் தனுஷின் அடுத்தடுத்த திரைப்படங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது, கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு இன்று பிசியான இசையமைப்பாளராகவும் மாறிவிட்டார் அனிருத்.
ஆனால் சில காலமாக தனுஷின் எந்த திரைப்படத்திலும் அனிரூத் இல்லை..! அவர் இல்லாமல் இவர் படம் இல்லை என்று இருந்தது இந்த திடீர் பிரிவு எதற்கு என்று விசாரித்த போது சிம்புவின் பீப் பாடலுக்கு இசையமைத்ததால் தனுஷுக்கும் அனிருத்துக்கும் கருத்து வேறுபாடு வந்துள்ளது ரஜினி வீட்டிலும் அவரை அழைத்து கண்டித்துள்ளனர்.
அப்படி இருந்தும் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் கொடி திரைப்படத்தில் அவரை புக் செய்யவில்லை அவருக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், தனுஷ் இயக்கும் பவர் பண்டியிலும் ஷான் ரோல்டன் தான் இசையமைப்பாளர், அது மட்டும் அல்ல சொந்தர்யா இயக்கும் திரைப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே தனுஷ் தான் இந்த திரைப்படத்திலும் ஷான் ரோல்டன் தான் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.