சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், எந்த தொகுதியிலும் போட்டியிட தயார் என தவாக தலைவர் வேல்முருகன் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணயில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்து உள்ளது. ஏற்கனவே கம்யூனிஸ்டு உள்பட சில கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு முடிந்த நிலையில், இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி உள்பட சில கூட்டணி கட்சிகளிடம் திமுக தொகுதி பங்கீடு குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

 பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்  கூறும்போது,

“திமுக தலைமையின் மாபெரும் வெற்றிக் கூட்டணியில் கடந்த நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்,  சட்டமன்ற தேர்தல் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி பயணித்து வந்துள்ளது.  வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக ஒரு தொகுதியை வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்துள்ளோம்.  அதற்கான நியாயமான காரணங்களையும் எடுத்து வைத்துள்ளோம்.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் குரல் தமிழக சட்டமன்றத்தில் எவ்வாறு தமிழ்நாட்டு மக்களின் குரலாக ஒலிக்கிறதோ அதுபோல நாடாளுமன்றத் தில் ஒழிக்க வேண்டும் என எமது கோரிக்கையையும் கட்சியின் பொதுக்குழு தீர்மானத்தையும் திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் ஒப்படைத்துள்ளோம்.

திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு கண்டிப்பாக எங்களுக்கு ஒரு தொகுதியை வழங்குவார் என எதிர்பார்க்கிறோம்.  நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஜாதி வாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்திட வேண்டும் என்ற கோரிக்கையையும் திமுகவிடம் வைத்துள்ளோம்.

நேற்று முதல்வரை சந்தித்தபோது கண்டிப்பாக நாளை உங்கள் குழு அழைத்து பேசும் என்று சொன்னார்.  அது போலவே குழு அழைத்துள்ளது.  திமுகவின் குழுவில் எங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளோம்.  கண்டிப்பாக உறுதியான அங்கீகாரம் திமுகவிடம் கிடைக்கும்.

நியாயமான, நீதியான நேர்மையான தமிழக மக்களுக்காக பிரச்சனைகளின் என்னுடைய வாதம் சட்டமன்றத்தில் எடுத்து வைத்துள்ளேன்.  குரலற்ற மக்களின் குரலாக தொடர்ந்து சட்டமன்றத்தில் ஒழித்து வருகிறேன்.  சட்டமன்றத்தில் நான் மக்களின் குரலாக ஒழிப்பதை போலவே என்னுடைய கட்சியை சார்ந்தவர்களும் நாடாளுமன்றத்தில் தமிழக மக்களின் குரலாக ஒழிக்க வேண்டும் என்று என்னுடைய கோரிக்கையை திமுகவிடம் வைத்துள்ளேன்.  திமுக பாண்டிச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளில் எந்த தொகுதியை ஒதுக்கினாலும் தமிழக வாழ்வுரிமை கட்சி நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது”

இவ்வாறு வேல்முருகன் கூறினார்.