சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளனுக்கு 5வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அவரது  ‘பரோல் முடிந்து இன்று சிறைக்கு திரும்ப இருந்த நிலையில் 5 வது முறையாக அடுத்த மாதம் 26-ம் தேதி வரை மேலும் 30 நாள்கள் பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.‘

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு, ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும் தொடர்ந்து பரோல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது  5முறையாக தமிழகஅரசு பரோல் நீட்டித்து உள்ளது. பேரறிவாளன், சிறுநீரக தொற்று, வயிற்று வலி காரணமாக அவதிப்படுவதாக, அவரது அம்மா அற்புதம்மாள் தாக்கல் செய்யும் மனுவை காரணமாக கொண்டு அவருக்கு பரோல் வழங்கப்பட்டு வருகிறத.

தற்போதும், பேரறிவாளனுக்கு பல்வேறு உடல் நல பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக பத்திரிகை டாட் காம் இணையதளம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது. அது தற்போது உறுதியாகி உள்ளது.

விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி…! பரோல் நீட்டிக்கப்படுவதற்கான நாடகமா?