சென்னை

நடிகர் ரஜினிகாந்த் சசிகலாவைச் சந்தித்துள்ளார்.

சென்னை நகரில் உள்ள போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லம் அமைந்துள்ளது.  இதற்கு எதிரே சசிகலா புதிய வீடு ஒன்றைக் கட்டியுள்ளார்.

கடந்த மாதம் கிருகப்பிரவேசம் நடைபெற்ற இந்த வீட்டிற்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது .  நேற்று, சசிகலாவை அவரது வீட்டிற்குச் சென்று நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.

அப்போது ஜெயலலிதாவின் இடத்தை யார் நிரப்புவார் என ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ரஜினிகாந்த், அரசியல் பேச விரும்பவில்லை’ என அதற்குப் பதில் அளித்தார்.