சென்னை

டிகர் மாரிமுத்து மரணத்துக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இன்று பிரபல நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பால்  காலமானார். 57 வயதாகும் அவர்  டப்பிங் முடித்து வீட்டிற்குத் திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது சொந்த ஊரான தேனிக்கு இன்று மாலை உடல் கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் வருகை தந்துள்ளார்.

சின்னதிரை தொடரான ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.  அத்துடன் தமிழில் பரியேறும் பெருமாள், கார்பன், எமன், வீரமே வாகை சூடும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கிய  இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மாரிமுத்து மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் மாரிமுத்து மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் ,

”மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி ”

என இரங்கல் தெரிவித்துள்ளார்.