சென்னை: புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, மதுரை மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள  சேமிப்பு கிடங்குகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூட்டுறவுத்துறை சார்பில் புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, மதுரை மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள  சேமிப்பு கிடங்குகளை  திறந்து வைத்தார். மேலும் புதிதாக கட்டப்பட உள்ள கிடங்குகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட்டை, ராணிப்பேட்டை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 7 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 சேமிப்பு கிடங்குகளை திறந்து வைத்து திருப்பூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 6 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 கிடங்குகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

மேலும் நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியின் போது மறைந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைகளையும் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் வழங்கினார்.