காரைக்குடி: தமது ரசிகர்களை ரஜினிகாந்த் நம்பவில்லை, பாஜகவினரையே அதிகம் நம்புகிறார் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறி உள்ளார். தொடர்ந்து அவர் பேசியதாவது: ரஜினியின் செயல்பாடுகள் அனைத்திலும் பாஜகவே உள்ளது.

சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டால் அதிமுக அவரது கைக்கு சென்றுவிடும். அவர் தேர்தலில் நிற்க முடியாது போனால் பொறுப்புகள் அனைத்தும் டிடிவி தினகரன் வசம் சென்றுவிடும்.

ரஜினியின் செயல்கள் அனைத்திலும் பாஜகவே உள்ளது. அவர் தனது ரசிகர்களை நம்பவில்லை, பாஜகவினரையே நம்புகிறார். முழுக்க முழுக்க பாஜகவின் சாயலாக ரஜினி செயல்படுகிறார்.

வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணி இடையே தான் போட்டி. மற்றவர்களை அரசியல் களத்தில் சீரியஸாக எடுத்து கொள்ள தேவை இல்லை என்று கூறினார்.