சென்னை

இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட பலர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்களிப்பு மும்முரமாக தொடங்கி உள்ளது.   மக்களில் பலர் காலை வேளையிலேயே வாக்களிக்கத் துவக்கி விட்டனர்.   சரியாக 7 மணிக்கு முதல் திரைப்பிரபலமாக நடிகர் அஜித் மற்றும் அவர் மனைவி ஷாலினி தங்கள் வாக்கைப் பதிந்தனர்.

சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.    தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமலஹாசன் தனது வாக்கைப் பதிந்துள்ளார்.

இதைப் போல் திநகரில் உள்ள வாக்குச்சாவடியில் மூத்த  நடிகர் சிவகுமார் தனது மகன்களான சூர்யா மற்றும் கார்த்தியுடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்துள்ளனர்.