சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் ரஜினி நடித்து வருகிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
கொரோனாவால் பலமுறை தடைபட்ட படப்பிடிப்பு, தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.
ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்வதால் வழக்கத்தை விட பல மடங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. படப்பிடிப்பில் பங்கேற்பவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.
அண்ணாத்த படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தின் படப்பிடிப்பையும் முடித்துள்ளார் ரஜினிகாந்த். நயன்தாராவும் இந்த கடைசி ஷெட்யூல்டில் கலந்து கொண்டது முக்கியமானது.
தற்போது ஐதராபாத்தில் இருந்து, தனி விமானம் மூலம் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் நடிகர் ரஜினிகாந்த்.
அங்கிருந்து கார் மூலம் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்றார்.
இந்த வார இறுதியில் படத்தின் மொத்த படக்காட்சிகளும் படமாக்கப்பட்டுவிடும் என்கின்றனர். இதனால், திட்டமிட்டபடி நவம்பர் 4 தீபாவளிக்கு அண்ணாத்தயை திரையில் எதிர்பார்க்கலாம்.