ஒளிப்பதிவாளர் ராஜசேகரின் தந்தை மா. பாலசுப்ரமணியம் மாரடைப்பால் 18.09.2021 அன்று காலமானார். இவர் ஓவிய கல்லூரியின் முதல்வராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிசடங்கு முடியும்வரை ஒளிப்பதிவாளர் ராஜசேகருடன் இருந்து நடிகர் அருண் விஜய் ஆறுதல் கூறினார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் ஒளிப்பதிவாளர் ராஜசேகர் குறிப்பிட்டு டிவீட் செய்துள்ளார்.

அருண் விஜய் நடிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கும் பார்டர் படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.