சென்னை,

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூடத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.