சென்னை

மிழகத்தில் பல மாவட்டங்களில் மழை நீடிக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு முதல் தமிழகத்தின் பல இடங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.  சென்னை நகரிலும் பல பகுதிகளில் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது.   இதையொட்டி சென்னை வானிலை ஆய்வு மையம்  இன்று பகலிலும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை நீடிக்கும் என அறிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் நள்ளிரவில் கனமழை பெய்தது. வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், கருமந்துறையில் மழை பெய்தது. மேலு, விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர், திருக்கோவிலூர், முகையூர், கண்டாச்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

தவிர காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது. நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக ஆரணியில் 11.5, மைலம் (விழுப்புரம்), மேலூரில் தலா 6.6 செ.மீ மழை பதிவானது. தலைநகரில் சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் தலா 3, மேற்குத் தாம்பரத்தில் 4.7, தரமணியில் 2.9 செ.மீ மழைப் பதிவானது.