சென்னை

அடுத்த 2 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்தது.

தற்போது தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , வேலூர் , ராணிப்பேட்டை , திருவண்ணாமலை , கடலூர் , திண்டுக்கல் , புதுக்கோட்டை . சிவகங்கை , ராமநாதபுரம் , ஆகிய 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.