சென்னை

டுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை பெய்யலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தென் தமிழகப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது.

இந்திய வானிலை ஆய்வு மையம், தென்கிழக்கு அரபிக்கடல், அதனையொட்டிய மாலத்தீவு பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்திருந்தது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதாவது கோவை, திருப்பூர், விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.