டில்லி

ந்திய வானிலை ஆய்வு மையம் அரபிக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டில் மிக்ஜம் புயல் தாக்கத்தின் காரணமாக கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  பல இடங்களில் பணிகள் முடிக்கப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  மக்கள் புயலின் பாதிப்பில் இருந்து சிறிது சிறிதாக மீண்டு வருகின்றனர்.

தற்போது அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல், அதனையொட்டிய மாலத்தீவு பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.