கன்னட நடிகையான சஞ்சனா கல்ராணி தன் நண்பர் ராகுல் டான்சே மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

கோவா, கொழும்பு உள்ளிட்ட இடங்களில் இருக்கும் கசினோக்களில் முதலீடு செய்யுமாறு ராகுல் என்னை ஊக்குவித்தார். அந்த கசினோக்களின் மேனேஜர் நான் தான் என்று என்னிடம் கூறினார். கசினோக்களில் முதலீடு செய்தால் நல்ல வருமானம் வரும் என்று கூறினார்.

ராகுலை நம்பி அவர் பெற்றோரிடம் கடந்த 2018ம் ஆண்டு ரூ. 45 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள் என கூறியுள்ளார்.