டில்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 10 நாட்கள் அமெரிக்கச் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது  அம்மாநில முதல் அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையிலும், வரவிருக்கும் தேர்தலை இருவர் தலைமையிலும் காங்கிரஸ் சந்திப்பது என்றும் ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டது.

ஆலோசனை முடிந்தபின் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவுக்கு ராகுல் காந்தி சென்றுள்ளார்.  ஆவர் அமெரிக்காவில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். அவரை சான் பிரான்சிஸ்கோவில் காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு விவகாரங்களைக் கையாளும் சாம் பிட்ரோடா வரவேற்றார்.

தனது 10 நாள் சுற்றுப்பயணத்தில் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் ராகுல் உரையாட உள்ளார். தவிர வால் ஸ்ட்ரீட் நிர்வாகிகள், அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்காவின் நாடாளுமன்ற பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்தவும் உள்ளார். வரும் ஜூன் 4 ஆம் தேதி நியூயார்க்கில் ஒரு பொதுக் கூட்டம் மாதிரி மக்கள் சந்திப்பு ஒன்றும் நடத்தப்படவுள்ளதாகக் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.