150 நாள் பாரத் ஜோடோ யாத்திரையை முடித்துவிட்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, தற்போது நாடாளுமன்ற விடுமுறையை அடுத்து ஜம்மு காஷ்மீரில் தனிப்பட்ட முறையில் சுற்றுலா சென்றுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் பனிப்பொழிவு நிகழ்வதால் சுற்றுலா செல்வதற்கு உகந்த தருணமாக இருக்கிறது.

அங்குள்ள குல்மார்க் பகுதியில் பனிச்சறுக்கு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் சுற்றுலா பயணிகளை கவர்வதாக உள்ளது.

காஷ்மீர் சுற்றுலா சென்றுள்ள ராகுல் காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் தனது குடும்பத்துடன் சென்றுள்ளார்.

பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தி பனி ஸ்கூட்டர் ஒட்டி மகிழ்ந்தார், இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது.

பனி ஸ்கூட்டரை பிரியங்கா காந்தி தயக்கத்துடன் ஒட்டிய நிலையில் பிரியங்கா காந்தியை பின்னால் அமரவைத்துக் கொண்டு ராகுல் காந்தி அதனை லாவகமாக ஒட்டியதோடு அங்கிருந்த சுற்றுலா பயணிகளை ஆச்சரியப்படுத்தினார்.