டெல்லி:
ஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர் டிராபி’ டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் டில்லியில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 263, இந்தியா 262 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 61/1 ரன் எடுத்திருந்தது.

இந்திய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 118 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் இந்துாரில் மார்ச் 1ல் துவங்குகிறது.