தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் நகரில் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி சிறுவனுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் 5 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

வெற்றிபெற்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பதிவிட்டுள்ள ராகுல் காந்தி இந்திய ஜெர்ஸிக்கு தோல்வியே இல்லை என்று குறிப்பிட்டுள்ளதோடு இந்திய அணி சிறப்பாக விளையாடியதாக பதிவிட்டுள்ளார்.

56வது நாளாக தொடரும் இந்த நடைபயணம் 1500 கி. மீட்டரை கடந்துள்ளது.

தமிழகம், கேரளாவைத் தொடர்ந்து கர்நாடகாவில் சூடுபிடிக்கத் தொடங்கிய இந்த பாதயாத்திரை தெலுங்கானாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பெருகிவரும் இந்த ஆதரவால் தெலுங்கானா கட்சிகள் திகைத்துபோயுள்ளது.