இயக்குனர் பாலா தயாரிப்பில், பத்மகுமார் இயக்க நடிகர் ஆர் கே சுரேஷ் கதை நாயகனாக நடிக்கும் விசித்திரன் திரைப்படம், நாளை (மே 6) வெளியாகிறது.
பூர்ணா, மது ஷாலினி, இளவரசு, மாரிமுத்து, பகவதி பெருமாள் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.பி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
“விசித்திரன்” திரைப்படத்தை படக்குழு சிறப்பு காட்சியாக படம் வெளியிடுவதற்கு முன்பே திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு திரையிட்டது.
படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை, தொழிநுட்ப கலைஞர்களின் பங்களிப்பு, குறிப்பாக நடிகர் ஆர் கே சுரேஷின் “மாயன்” என்ற கதாபாத்திரத்தை, கதையின் நாயகனாக ஏற்று மிக சிறப்பாக நடித்ததை வியந்து இயக்குனர் சங்கத்தினர் வெகுவாக பாராட்டினர்.
திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் ஆர் கே செல்வமணி பேசுகையில், “தன்னையே விதையாக்கி ஒரு மரமாக முளைக்க செய்திருக்கிறார் ஆர்.கே.சுரேஷ்.
தன்னை முழுமையாக ஒப்படைத்து இவ்வளவு சிறப்பாக அனைவரும் வியக்கும்படி நடித்த ஆர் கே சுரேஷ் ஒரு சிறந்த நடிகராக தன்னை பதிவு செய்து இருக்கிறார்.
இந்த படத்துக்கு மரணம் இல்லை, காலத்துக்கும் பெயர் சொல்லும் ஒரு படைப்பு, படத்தை பார்க்கவேண்டும். ஆர் கே சுரேஷ்க்கு என் தனிப்பட்ட பாராட்டுகள்.
இயக்குனர் சங்க செயலாளர் இயக்குனர் ஆர் வி உதயகும்மார், “விசித்திரன்” படத்தை பார்த்து இரண்டு நாளாக நான் தூங்கவில்லை. அவ்வளவு அற்புதமான படம்” என்றார்.
இயக்குனர் சீனு ராமசாமி பேசுகையில், “விசித்திரன் படத்தின் மூலமாக ஒரு நேர்த்தியான நடிகன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துவிட்டதாக நான் நினைக்கிறேன். தொடர்ந்து இதுபோல நடிப்புக்கு சவால் விடும் படங்களை ஆர் கே சுரேஷ் நடிக்க வேண்டும். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்” என்றார்.
அதன்பிறகு, ஒவ்வொரு துணை, இணை, உதவி இயக்குனர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். ஒரு வளர்ந்தவரும் நடிகனின் படத்தை பார்த்து இயக்குனர் சங்கம் வெகுவாக சிலாய்த்து பாராட்டியது இதுவே முதல் முறை. அதன்பிறகு படத்தின் கதாநாயகனும் தனது ஸ்டுடியோ 9 நிறுவனம் மூலம் உலகெங்கும் “விசித்திரன்” படத்தை வெளியிடும் ஆர் கே சுரேஷ் நெகிழ்ந்து அனைவருக்கும் நன்றி கூறினார்.