சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கலைகோட்டு உதயம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 12-ந்தேதி நடைபெற இருக்கிறது. தற்போது வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 23ந்தேதி கடைசி நாள்.

இந்நிலையில் பிரதான கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகிறது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலைக்கோட்டு உதயம் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் தமிழன் தொலைக் காட்சியின் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.