சென்னை:
பொதுத்தேர்வுகளில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஏனென்றால் அடுத்த மாதம் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.

இதற்காக முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் கடந்த சில நாட்களாக கசிந்துவரும் திருப்புதல் தேர்வு வினாக்கள் பற்றியும் பேசப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார்.

இந்த நிலையில் மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். அதன்படி நடத்தப்படாத பாடங்களிலிருந்து பொதுத்தேர்வில் கேள்விகள் கேட்கப் படாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.