சென்னையில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டோர் வீடுகளில், மாநகராட்சி சுகாதாரத்துறை மீண்டும் ‘ஸ்டிக்கர்’ ஓட்டும் பணியை துவங்கியுள்ளது.

ஒமைக்ரானின் உருமாறிய ‘எக்ஸ்.பி.பி., – பி.ஏ., 2’ வகை கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னையில் மட்டும் தினமும் 50 பேருக்கு புதிதாக தொற்று ஏற்படுகிறது.

இதனை அடுத்து தொற்று கண்டறியப்பட்ட நோயாளிகள் 14 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுவதுடன் முகக்கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.