சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி , எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில்  சமீபத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார். 2 நாட்கள் ஆஜரான அவரிடம் ஆறுமுகசாமி ஆணையம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டது. இதில் முதல்நாள் கேள்வியின்போது, தெரியாது, தெரியாது என கிளிப்பிள்ளை போல கூறி வந்த ஓபிஎஸ் 2வது நாள், பரபரப்பான தகவல்களை கூறினார். ஜெ.மரணத்துக்கு சசிகலா காரணம் அல்ல என்று கூறி, தனது அரசியல் நாடகத்தை அரங்கேற்றினார்.

இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் பெங்களூரு மாவட்ட செயலாளர் புகழேந்தி, எடப்பாடி பழனிச்சாமியிடமும் விசாரணை நடத்த வேண்டும் என மனு கொடுத்துள்ளார்.