சென்னை :

ட்டசபையில் இருந்த வெளியேற்றப்பட்ட திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை செயலகம் எதிரே உள்ள காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

அவரை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்தித்து பேசினார்.  இது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, தமிழகத்தில் ரத யாத்திரை நடத்துவதற்கு என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பியவர்,  இந்து அமைப்புகளை வைத்து பாஜக ரத யாத்திரை நடத்துகிறது என்று குற்றம் சாட்டினார்.

அதுபோல நாட்டில், தலைவர்கள் சிலை உடைப்பது போன்ற வன்முறைகளை பாஜக தூண்டி வருவதாகவும், இதுபோன்ற  வன்முறையை தூண்டும் பாஜகவின் செயல் தமிழகத்தில் எடுபடாது என்றும் கூறினார்.

மேலும், ரத யாத்திரையை தடுப்பார்கள் என நெல்லையில் 144 தடை உத்தரவு போட்டத்தை இப்போதுதான் பார்க்கிறேன் என்றவர், பாஜகவுக்கு ஆதரவாக தமிழகத்தில் அதிமு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.