திரைப்படம் தணிக்கை செய்யப்படுவதற்கு தயாரிப்பாளர் சங்கம் தடையில்லா சான்றிதழ் தர வேண்டும் என்பது விதி ஆகும்.   அந்தக் கடிதம் இருந்தால் மட்டும் தணிக்கை வாரியம் தணிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும்.

தனுஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படத்தை தனிக்கை செய்ய சென்ற மாதம் தணிக்கைக்கு தயாராக உள்ளதாக அறிவித்துள்ளனர்.  ஆனால் இன்று வரை தடையில்லா சான்றிதழை சங்கம் அளிக்கவில்லை.   வேன்டுமென்றே சங்கம் தாமதிப்பதாக தயாரிப்புக் குழுவினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

தயாரிப்பாளர் சங்கத்தினர் வரிசைப்படி காலாவுக்கு முன்பு செய்த படங்களுக்கு சான்றிதழ் கொடுத்து வருவதாகவும் அஹ்டன் பிறகு காலாவுக்கு கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் காலா தயாரிப்பு நிறுவன பிரதிநிதி, “எங்கள் காலா படத்தை ஏப்ரல் 27ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்து விட்டோம்.   அதனால் உடனடியாக தடையில்லா சான்றிதழை வழங்குங்கள்.   இல்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்” என எச்சரித்துள்ளார்.

இது குறித்து சங்கத்தின் சார்பாக நடிகர் விஷால் விரைவில் ரஜினிகாந்தை சந்தித்து விளக்கம் தர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.