மாதவன் நடித்த யாவரும் நலம், சூர்யாவின் 24 படங்களை இயக்கிய விக்ரம் குமார் அடுத்து ஒரு வெப் தொடர் இயக்குகிறார். அதில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க உள்ளார்.

மனம் படத்தில் பழம்பெரும் நடிகர் நாகேஸ்வர ராவ், அவரது மகன் நாகார்ஜுன், அவரது மகன் நாக சைதன்யா என மூன்று தலைமுறை நடிகர்கள் இணைந்து நடித்தனர்.

தற்போது அதே நாக சைதன்யாவை வைத்து தேங்க்யூ என்ற படத்தை எடுத்து வருகிறார்.

இந்தப் படம் முடிந்ததும் அடுத்து ஒரு வெப் தொடர். இதிலும் நாக சைதன்யாவே நாயகன். நாயகியாக ப்ரியா பவானி சங்கரை ஒப்பந்தம் செய்துள்ளனர். தெலுங்கு மொழியில் இந்தத் தொடர் தயாராகிறது.