டெல்லி: குடியரசு தினத்தையொட்டி காவல் துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் விருது  அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தவிருது பட்டியலில்  தமிழகத்தைச் சேர்ந்த 21 காவலர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது.

வீர, தீர செயலுக்கான விருது ஜஜி துரைக்குமார் மற்றும் ராதிகாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது ஆண்டுதோறும்  குடியரசு தலைவரால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி,  இந்தாண்டு நாடு முழுவதும் 746 விருதுகள், 95 பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் தமிழகத்தில் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி உள்ளிட்ட 21 காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

வீர, தீர செயலுக்கான விருது ஜஜி துரைக்குமார் மற்றும் ராதிகாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது பெறுவோர் விவரம்:

  1. ஹெச். ஜெயலக்ஷ்மி – காவல் கண்காணிப்பாளர்
  2. ஜி. ஸ்டாலின் – காவல் கண்காணிப்பாளர்
  3. எஸ். தினகரன் – கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
  4. ஆர். மதியழகன் – துணை காவல் கண்காணிப்பாளர்
  5. டி. பிரபாகரன் – கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
  6. ஏ. வீரபாண்டி – துணை காவல் ஆணையர்
  7. எம். பாபு- துணை காவல் கண்காணிப்பாளர்
  8. பி. சந்திரசேகரன் – துணை காவல் கண்காணிப்பாளர்
  9. டி.ஹெச். கணேஷ் – துணை காவல் ஆணையர்
  10. ஜெ. ஜெடிடியா – துணை காவல் கண்காணிப்பாளர்
  11. ஜெ.பி. பிரபாகர் – காவல் கண்காணிப்பாளர்
  12. ஜெ. பிரதாப் பிரேம்குமார் – காவல் உதவி ஆணையர்
  13. என். தென்னரசு – காவல் உதவி ஆணையர்
  14. கே. வேலு – துணை காவல் கண்காணிப்பாளர்
  15. எஸ். அகிலா – காவல் ஆய்வாளர்
  16. எம். குமார் – காவல் ஆய்வாளர்
  17. எஸ். அசோகன் – Deputy Commandant
  18. வி. சுரேஷ்குமார் – Assistant Commandant
  19. எம். விஜயலக்ஷமி – காவல் ஆய்வாளர்
  20. எம்.சி.சிவக்குமார் – துணை ஆய்வாளர்
  21. ஆர். குமார் – துணை ஆய்வாளர்
  22. ஏ.டி. துரைக்குமார் – காவல் துறைத்தலைவர்
  23. ஏ. ராதிகா – காவல் துறைத்தலைவர்