சென்னை:
மிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்குத் தேசிய ‘நல்லாசிரியர்’ விருதைக் காணொலி வாயிலாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இந்திய அரசு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருதினை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தேர்வான 44 ஆசிரியர்கள் பட்டியல் சில வாரங்களுக்கு முன்புவெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டம் பிரதியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.ஆஷா தேவி மற்றும் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை டி.லலிதா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் புதுச்சேரியில் மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர் வெ.ஜெயசுந்தர் தேர்வாகியுள்ளார்.