திருச்சி

திருச்சியை அடுத்த திருவெறும்பூரில் கர்ப்பிணிப் பெண் மரணத்துக்கு காரணமான காவல்துறை ஆய்வாளர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உஷா காமராஜ்

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா தனது மனவி கர்ப்பிணிப் பெண் உஷாவுடன் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார்.   அவரை ஜீப்பில் துரத்திய காவல் ஆய்வாளர் காமராஜ் ஜீப்பில் இருந்த படியே பைக்கை எட்டி உதைத்தில் ராஜாவும் உஷாவும் கீழே விழுந்தனர்.    அதனால் உஷா மரணம் அடைந்தார்.    அதை ஒட்டி 3000 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்த போது காவல்துறை தடியடி நடத்தியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் அங்கிருந்து பைக்கில் தப்பி ஓடிய ஆய்வாளர் காமராஜ் பைக்கில் இருந்து விழுந்ததாகக் கூறி மருத்துவமனையில் சேர்ந்தார்.    அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   சம்பவம் நடைபெற்ற போது காமராஜ் போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.  காமராஜ் மீது கொலை செய்யும் நோக்கம் மற்றும் விபத்து ஏற்படுத்துதல் ஆகிய இருபிரிவுகளில் வழக்கு பதிந்த காவல் துறையினர் ஆய்வாளர் காமராஜை திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.