நெல்லை: ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த கர்ப்பி உள்பட பலர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவ‘ பயணிகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று மதியத்திற்குள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 500 பயணிகள் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது.  இதைத்தொடர்ந்து நேற்று இரவு முதல் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்றது. ஆரம்பத்தில், 300 பேர் மீட்கப்பட்டு,  அருகில் உள்ள பள்ளியிலும், மற்றவர்கள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலும் தங்க வைக்கப்பட்டனர்.  54 பெண்கள், ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் 19 குழந்தைகள் உட்பட 100 க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவு தகவல் வெளியாக உள்ளது.

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 4 பேரும் தற்போது முதலுதவி சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி வெள்ளத்தில் மிதந்து வருகிறது. இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் தென் மாவட்டங்களுக்கு சென்ற ரயில்கள் பாதி வழியிலியே நிறுத்தப்பட்டது. குறிப்பாக கோவில்பட்டி, திருநெல்வேலி, திருச்செந்தூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ரயில் நிலையங்கள் வெள்ள நீரில் மிதக்கிறது. இப்படியான நிலையில் நேற்று முன் தினம்

திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. ஆனால் அந்த ரயில் திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு வருவதற்குள் கனமழையால் வெள்ளம் சூழ்ந்து விட்டதால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலேயே அந்த ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. எந்தவித அறிவிப்பும் இல்லாமல் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் என்னவென்று தெரியாமல் விழித்தனர். ஆனால் நேரம் சென்றதே தவிர ரயில் அங்கிருந்து புறப்பட்டதாக தெரியவில்லை.

மேலும் திருச்செந்தூர் ரயில் நிலையத்தை தண்ணீர் சூழந்ததால் ரயிலை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் செய்துங்கநல்லூர் – ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்களுக்கு இடையே 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் தண்டவாளத்தில் இருந்த சரளை கற்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது.


இதனால் ரயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு தீவிரமாக களம் கண்டது. முதற்கட்டமாக உள்ளே சிக்கியிருக்கும் 500 பயணிகளுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்டவை ராணுவ ஹெலிகாப்டன் மூலமாக வழங்கப்பட்டது. தண்ணீர் தேசமாக மாறியுள்ளதால் சாலை மார்க்கமாக உள்ளே செல்ல முடியவில்லை.

இதனால் 2 நாட்களுக்கும் மேலாக பயணிகள் உள்ளே சிக்கி தவித்து வரும் நிலையில் கீழே இறங்க முடியாத அளவுக்கு வெள்ளம் சென்று கொண்டிருந்தது. இதற்கிடையில் நேற்று மாலை முதல் மழை நின்றதால், வெள்ளம் படிப்படியாக வடியத்தொடங்கியத. இதைத் தொடர்ந்து, நேற்று இரவு முதல் ரயிலில் சிக்கிய பயணிகளை மீட்கம் பணியில், தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவ வீரர்கள் களமிறங்கினார்.

3வது நாளாக ரயிலுக்குள் சிக்கியுள்ள பயணகளின் மீட்பு பணி  தொடங்கியத. சுமார் 800 பயணிகள் சிக்கிய நிலையில், இரவு   முதற்கட்டமாக கர்ப்பிணி, முதியவர்கள்,சிறுவர், சிறுமியர்கள் உள்பட 300 பேர்  மீட்கப்பட்டனர். அவர்களை அருகிலுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து இன்று காலை முதல் மீண்டும் மீட்பு பணி நடைபெற்றது. ரயிலில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு  நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கூறிய ரயில்வே அதிகாரி ஒருவர் , என்டிஆர்எஃப், விமானப்படை, ரயில்வே மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். திங்கள்கிழமை அதிகாலை முதலே சிக்கித் தவித்த பயணிகள், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளில் இரவைக் கழித்தனர். ஆரம்பத்தில், 300 பேர் அருகில் உள்ள பள்ளியிலும், மற்றவர்கள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலும் தங்க வைக்கப்பட்டனர்.

திங்கள்கிழமை இரவு, தூத்துக்குடி அருகே 54 பெண்கள், ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் 19 குழந்தைகள் உட்பட 100 க்கும் மேற்பட்டவர்களை மீட்க ராணுவத்தினர் உதவினார்கள். அவர்களுக்கு மருத்துவ பராமரிப்பும், உயிர் ஆதரவும் வழங்கப்பட்டதாக, சென்னை டிஃபென்ஸ் பிஆர்ஓ X இல் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், நேற்று (திங்கள்கிழமை)  இரவு அமைச்சர்கள் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட ஆட்சியர்களுடன்  சந்திப்பு நடத்தி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் பல பகுதிகளில் மக்கள் இன்னும் சிக்கித் தவிக்கும் நிலையில் மீட்புப் பணிகளை முழுவீச்சில் தொடருமாறு கேட்டுக்கொண்டார். .

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தண்ணீரை வெளியேற்ற கூடுதல் பம்புகள் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டு மீட்புப் பணிகளின் ஒரு பகுதியாக சுமார் 200 படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.