சென்னை: சேலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுக இளைஞர் அணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் அடிக்கடி மழை பொழிந்து வருகிறது.  டிசம்பர் முதல்வாரத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களை மிக்ஜாம் புயல் புரட்டிப்போட்ட நிலையில், தற்போது  தென் மாவட்டங்களில் கனமழை பெய்து மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கி உள்ளது.

இதன் காரணமாக  தி.மு.க இளைஞரணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திமுக இளைஞர் அணி 2-வது மாநாடு  மாநாடு, சேலத்தில் வரும் டிச. 24-ம் தேதி நடைபெறவிருந்த  இருந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழை காரணமாக, வரும் டிச. 24, 2023 அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த டிச. 17-ம் (ஞாயிற்றுக் கிழமை) தேதி இந்த மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் வெள்ளம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக டிச. 24-ம் தேதிக்கு மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது 2-வது முறையாக மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.