சென்னை:
பாலச்சந்திரனை சாகவிட்டுட்டு தன் உயிரை தப்பி போகிற கோழையில்லை பிரபாகரன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலை புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை, சில கேள்விகள்தான் உள்ளது. தம்பி பாலச்சந்திரனை சாகவிட்டுட்டு தன் உயிரை தப்பி போகிற கோழையில்லை அவர். எக்காரணத்தை கொண்டும் நாட்டை விட்டு வெளியேறமாட்டேன் என்று கூறியவர், 15 ஆண்டுகளாக பதுங்கி இருக்க மாட்டார்.

அவர் சொல்லிட்டு வருபவர் அல்ல வந்துட்டு சொல்பவர். அதனால் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம், மக்களுக்கு முன் தோன்றுவார் என்றால் வந்ததற்கு பிறகு பேசுவோம். பழ.நெடுமாறனோடு தந்தை – மகன் உறவு உள்ளது. என்னிடம் அவர் இதுகுறித்து பேசியதில்லை. ஊடகத்தின் வாயிலாகவே நானும் தெரிந்து கொண்டேன். இதை விவாதத்திற்கு எடுத்து கொள்ளாமல், கடந்து செல்ல வேண்டும் என்றார்.