சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு மறு தேதி அறிவிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி மீண்டும் மாற்றம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் அமறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டை கடந்த வாரம் மிரட்டி வந்த மாண்டஸ் புயல் காரணமாக, டிசம்பர் டிசம்பர் 9, 10ஆம் தேதிகளில் நடைபெற்ற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு, பாலிடெக்னிக், மற்றும் சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்று தேதிகளை அறிவித்தது. அதன்படி,   டிசம்பர் 9ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.24ம் தேதியும், டிசம்பர் 10ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.31ம் தேதியும் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில், தற்போது தேர்வு தேதியும் சில மாற்றங்களை செய்து அறிவித்துஉள்ளது. அதனப்டி, டிசம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி 19-ல் நடைபெறும் என்றும், டிசம்பர் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி 20ஆம் தேதி நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.