பூனம் பாண்டேயின் கணவர் சாம் பாம்பே இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எடிட்டரும் ஆவார்.

2020ம் ஆண்டில், இந்த தம்பதியினரின் திருமணம் முடிந்த இரண்டு வாரத்தில், பூனம் பாண்டே, கணவர் தன்னைத் தாக்கி, துன்புறுத்துவதாக புகார் தெரிவித்தார். இதனால், போலீசார் இவரை கோவாவில் கைது செய்தனர்.

இந்நிலையில் தமது கணவர் படப்பிடிப்பு தளத்தில் தன்னை அடித்து துன்புறுத்தியதாக நடிகை பூனம் பாண்டே, மும்பை காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார்.

இதனைதொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பூனம் பாண்டேவின் கணவரான சாம் பாம்பேவை கைது செய்தனர். தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் பூனம் பாண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.