கொரோனாவால் உலகம் முழுவதும் உயிரிழப்புகள் தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில் பல நாடுகள் பொருளாதார ரீதியாகவும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றன.
அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ள படங்களின் ஷூட்டிங்கும் தடைபட்டுள்ளது.
இந்நிலையில் லைகா நிறுவனம் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் உடன் இணைத்து சுமார் 500 கோடி ருபாய் பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படம் துவங்கியது.
இந்நிலையில் தற்போது நிலவும் பொருளாதார நிலையை காரணம் காட்டி அதை குறைக்க லைகா முடிவெடுத்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.