சென்னை,

மிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.

நேற்று தமிழக அரசு திடீரென நாளை (12ந்தேதி) விடுமுறை என அறிவித்ததால், தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை மாணவர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை (12ந்தேதி) விடுமுறை என தமிழக அரசு  நேற்று மாலை அறிவித்தது. இதன் காரணமாக நாளை நடைபெற இருந்த அண்ணா  பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாளை ( ஜனவரி 12) நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் வரும் ஜனவரி 18 நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது.