திருநாவுக்கரசர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளதாவது:

அமைச்சர்கள், முதல்வர்கள் என்று யாராக இருந்தாலும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் எச்சரிக்கையாகவும் பாடமாகவும் இந்தத் தீர்ப்பு இருக்கும். இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று தெரிவித்தார்.

மேலும், “பெரும்பான்மை இருப்பவரை முதல்வராக்க வேண்டும். சுதந்திரமாக எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதுதான் அப்போதிலிருந்து எங்கள் கருத்து” என்று தெரிவித்துள்ளார்