சென்னை: தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் பணியில் உள்ள காவலர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்குள் நுழையக் கூடாது டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழ்நாடு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், சென்னை MRC நகரில் உள்ள பள்ளியில் தனது வாக்கைச் செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர், மாநிலத்தில் “இதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறியவர், காவலர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்குள் நுழையக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் பொறுப்பு டிஜிபி இருந்த நிலையில், அவரது நடவடிக்கையில் அதிருப்தி கொண்ட தேர்தல் ஆணையம், அவரை மாற்றி, அவருக்கு பதிலாக டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோரை நியமனம் செய்தது. இதையடுத்து, அவர் ஏப்ரல் 2ந்தேதி தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அவர் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]