சென்னை,

மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடுத்து நடைபெற்ற வன்முறை காரணமாக மெரினாவை ஒட்டி பகுதிகளில் காவல்துறையினரின் தேடுதல் வேட்டை இன்னும் தொடர்ந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு பேராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால் நேற்று முன்தினம் சென்னை போர்க்களமாக மாறியது.

மாணவர்களை காரணம்காட்டி சமூக விரோத கும்பல்கள் சென்னை முழுவதும் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து சென்னை கடற்கரை மற்றும் திருவல்லிக்கணி, மைலாப்பூர் பகுதிகளில் வன்முறையை ஏற்படுத்தியவர்களை தேடி, மெரினாவை ஒட்டியுள்ள பகுதியில் வீடு வீடாக சோதனைபோட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக  அப்பகுதியை சேர்ந்த  பெண்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். தனியாக இருக்கும் பெண்களை போலீசார் மிரட்டுவதால் பெண்களும், குழந்தைகளும் அச்சத்தில் இருக்கிறார்கள்.