சோழிங்கநல்லூர்,

மைதியாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் அதிரடி தாக்குதல் நடித்தினர். இது மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜல்லிக்கட்டுக்க ஆதரவு தெரிவித்து அமைதியாக போராடிய சென்னை மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடித்தினர் இதன் காரணமாக போர்க்களமாக மாறியது ஓ.எம்.ஆர் சாலை.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி சென்னையில் கல்லூரி மாணவர்கள் அமைதியான முறையில் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை மெரீனா கடற்கரையில லட்சக்கணக்காண மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று காலை முதலே சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பழைய மகாபலிபுரம் சாலையில்  உள்ள ஜேப்பியார் குழும, சத்தியபாமா கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய மகாபலிபுரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார், மாணவர்களையும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கலைந்து போகுமாறு கூறினார்.

ஆனால் மாணவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சோழிங்கநல்லூர் சந்திப்பில் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே, கூட்டத்தைக் கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர்.

போலீசாரின் தாக்குதலை அடுத்து மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் பழைய மகாபலிபுரம் சாலையே போர்க்களமாக காட்சியளித்தது.

கலைந்து செல்லாத மாணவர்களை சிலரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் சென்னை மற்றும் சுற்றுவட்டார கல்லூரி மாணவர்கள் கடும் கோபமடைந்து உள்ளனர்.

இதுவரை எந்தவித வாக்குறுதியும் அளிக்க முன்வராத தமிழக அரசுமீதும், தமிழக முதல்வர் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். போலீசாரை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஏற்கனவே அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சோழிங்கநல்லூரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைதியாக நடைபெற்று வரும் போராட்டத்தை கட்டுப்படுத்த தெரியாமல் வன்முறைக் களமாக மாற்ற போலீசார் முயன்று வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

போலீசாரே வன்முறையை தூண்டி வருகிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது….