தூத்துக்குடி:

தூத்துக்குடியில் காவல்துறையினரின் அராஜகம் தொடர்ந்து வருகிறது. நியாயம் கேட்கும் மக்களை அடித்து விரட்டிய காவல்துறையினர் அவர்கள்மீது இன்றும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில், தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த காளியப்பன் என்பவர் இறந்துள்ளார்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க அப்பாவி பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய அத்துமீறிய, அராஜகமான  தாக்குதல் காரணமாக 12 பேர் உயிரிழந்தனர்.

இறந்தவர்களின் உடல்களை வாங்க அப்பகுதி மக்கள் மறுத்து வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி அருகே அண்ணாநகர் பகுதியில் குடியிருந்த பொதுமக்களை கலைக்க முயன்றபோது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பொதுமக்களை கலைக்க ரப்பர் குண்டுகள் மூலம் சுடப்படுவதாக கூறப்பட்டது. ஆனால், உண்மையான குண்டு மூலம் போலீசார் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். இதன் காரணமாக தூத்துக்கு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.