சென்னை:
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் 32வது ஒலிம்பிக் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீரர் நீரஜ் சோப்ர. இதன் மூலம் தடகளப் போட்டியில் ஒலிம்பிக் களத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று தந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள ட்விட்டர் பதிவில், கோலாரில் தோண்டியெடுக்கப்பட்ட மொத்தத் தங்கத்திற்கும் மேலானது இந்த ஒற்றை ஒலிம்பிக் தங்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்திய தேசியக் கோடியை ஒலிம்பிக்கஈல் உயர்த்தி பிடித்த நீரஜ்! உங்களுக்கு எங்கள் வீர வாழ்த்து என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.