சென்னை

பாஜக வழக்கறிஞர் மீது தாய் மற்றும் மகளுக்கு பாலியல் தொலை தந்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள எருக்கஞ்சேரி பகுதியில் வசிக்கும் பார்த்தசாரதி பாஜக வழக்கறிஞர் பிரிவில் உள்ளவர் ஆவார்.   இவர் மீது ஒரு ப் எண் காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தார்.    அந்த புகாரில் பார்த்தசாரதி ஏற்கனவே தமக்கும் தன் மகளுக்கும் பாலியல் தொலை தந்ததாக அளித்த புகாரில் அவர் கைதாகி உடனே ஜாமீனில் வெளிவந்துள்ளதை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜாமீனில் வந்த பிறகும் பார்த்தசாரதி தனக்கும் தனது 15 வயது மகளுக்கும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.   இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இது உறுதி ஆனதால் பார்த்தசாரதி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் தொந்தரவு மற்றும் ஆபாசமாகத் திட்டியதற்காக வழக்கு மற்றும் 15 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததால் போக்ஸோ  சட்டத்தின் கீழ் வழக்கு ஆகியவை பதியப்பட்டுள்ளன.   இதையடுத்து பார்த்தசாரதி தலைமறைவாகி உள்ளார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.