பிரதமர் மோடியின் தமிழக வருகை :  மக்கள் விரும்பவில்லையா?

*** ஒரு இடைவெளிக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வருகை தருகிறார்! அவரையும் அவரது கட்சியையும் தவிர, மக்கள் எவரும் இதை விரும்பியதாகத் தெரியவில்லை!

** ஏழை எளிய கிராமப்புற மாணாக்கர்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போடும் நீட் தேர்வு….

*மழை,வெள்ள இயற்கைச் சீற்றத்தால் வாழ்விழந்து அல்லற்படும் விவசாயப் பெருமக்களுக்கு நிவாரண உதவி தராமல் வஞ்சிப்பது….

** தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது…. குறைந்த பட்சம் ஒரு அனுதாபம் கூடத் தெரிவிக்காமல் இருப்பது…

* தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு ஒரு சிறு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாமல் இருப்பது….

* தமிழகத்துக்கு வரவேண்டிய ஜி. எஸ். டி. நிலுவைத் தொகையைத் தராமல் வஞ்சிப்பது…

* இப்படி தமிழக மக்களின் உள்ளங்களில் கனன்று கொண்டிருக்கும் பல எண்ணங்களை உணர்ந்தும் உணராமல் பாறை போல் இறுகிக் கிடக்கும் மோடி, தமிழகத்தில் பொங்கல் விழா கொண்டாட இங்கே வரப் போகிறார்!

அவரது ‘ ஒத்த ஓட்டு’ தமிழக பா. ஜ. க. வும்… அதற்காக மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்!

** இந்த ‘ விசித்திர’ வருகையை மக்களும் அமைதியுடன் எதிர்பார்க்கிறார்கள்!!

** ஓவியர் இரா. பாரி.