சென்னை

ன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்து கடனாளியான வங்கி அதிகாரி குடும்பத்தினரைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை துரைப்பாக்கத்தில் வசித்து வரும் மணிகண்டன் கோவையை சேர்ந்தவர் ஆவார்.  இவர் தனியார் வங்கியில் பணி புரிந்து வருகிறார்.  கடந்த 31 முதல் இவர் தனது குடியிருப்பை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார்.   இந்நிலையில் இவரது வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் அருகில் வசிப்போர்  காவல்நிலையத்தில் புகார் அளிந்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உள்ளே பூட்டி இருந்த வீட்டின்  கதவை உடைத்து சென்றுள்ளனர்.  அங்கு மணிகண்டன் தூக்கில் பிணமாகத் தொங்கி உள்ளார்.  அவர் ஏற்கனவே தனது மனைவி தாராவி கிஎஈக்ந்ந்ச் மட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். மேலும் மகன்கள் தரண், தகன் ஆகிய இருவரையும் முகத்தில் தலையணையால் அழுத்திக் கொன்றுள்ளார்.

சடலங்களைக் கைப்பற்றிய காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.   இந்த விசாரணையில் மணிகண்டன் ஆன்லைன் மூலமாக ஏராளமான பணத்தை இழந்து அதற்காக ரூ.30 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளார்.   கடன் தொல்லை காரணமாக அவர் மனைவி மகன்களைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.