சென்னை: பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி பிப்ரவரி 14ம் தேதி தமிழகம் வருகிறார்.

சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்கும் பொருட்டு பிரதமர் மோடி வருகிற 14ம் தேதி தமிழகம் வரவுள்ளார். பிப்ரவரி 14ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, வண்ணாரப் பேட்டை-திருவெற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார்.

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டி, மேலும் பல திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார். அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த நிலையில் அவர் தமிழகம் வருவது குறிப்பிடத்தக்கது.