ன்னியாகுமரி

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள நாளை மறுநாள் பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகிறார் 

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. தேர்தலில் தென்மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என பாஜக திட்டமிட்டுள்ளது. எனவே பிரதமர் மோடி பாஜகவுக்கு ஆதரவு திரட்டி பல்வேறு மாநிலங்களில் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.

தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி சமீபகாலமாகத் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்து, பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.  ஏற்கனவே அவர் தமிழகத்தில் ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை ஆகிய பகுதிகளில் பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினார்.

தற்போது அவர் மீண்டும் தமிழகம் வர உள்ளார். நாளை மறுநாள் கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பாஜகவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். இதையொட்டி அவர் ஹெலிகாப்டரில் கன்னியாகுமரிக்கு வர இருக்கிறார்.

பிரதமர் மோடி நாளை மறுநாள் பாலக்காடு மற்றும் ஆலத்தூர் தொகுதிகளிலும், 17 ஆம் தேதி பத்தினம் திட்டாவிலும் பிரசாரம் செய்வார் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நாளை மறுநாள் பத்தினம்திட்டாவில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும், 19 ஆம் தேதி பாலக்காட்டில் நடக்கும் ரோடு-ஷோவிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டு பிரசாரம் செய்கிறார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.