ஜஸ்வந்த்
ஜஸ்வந்த்

தமிழகம் மற்றும் புதுவையல் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 10.30 மணிக்கு மேல் அறிவிக்கப்படும்  என்று பள்ளி கல்வி ஆணையம் தெரிவித்திருந்தது. அதற்கும் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த மாணவர்கள் இருவர் பற்றி தகவல் வெளியாகி  இருக்கிறது.
ஆர்த்தி
ஆர்த்தி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த வித்தியாமந்திர் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த மாணவன் ஜஸ்வந்த், மாணவி ஆர்த்தி  ஆகியோர்  1, 195 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்தனர்.
1, 194 மார்க்குகள் பெற்று திருவள்ளூர் மாவட்டத்தை ஸ்ரீ நிகேதன் பள்ளியை சேர்ந்தவர்கள் பவித்ரா இரண்டாமிடத்தை பிடித்தார்.
நாமக்கல்எஸ்கேவி மேல்நிலைப்பள்ளியை வேணுபிரித்தா 1,193 மார்க்குகள் பெற்று 3 வது இடத்தை பிடித்தார்.